Friday 9 September 2016

இராவணன்-தமிழ் மன்னன்


இராவணன் இவனுக்கு நிகரான ஒரு திடகாத்திரமுள்ள தமிழன் வரலாற்றில் யார் இருக்கிறான்.
முன்னொரு காலத்தில் தமிழகம் முழுவதையும் ஆண்ட மன்னன் இராவணன்.
அவனுடைய ஆட்சிக் காலத்தில் தமிழகத்தின் தலைநகராக இலங்கை நகர் இருந்தது.இராவணன் கற்றோர் போற்றும் கல்விமான்; எவராலும் வெல்ல முடியாத பேரு வீரன்; விலங்குகளும் மரம் செடி கொடிகளும் இன்புறப் பாடும் இசைவல்லான்; நாட்டியக் கலையில் நிகரற்ற கலைஞன்; செங்கோல் ஆட்சி செய்த மன்னன்; ஒரு குறையுமின்றி குடிகளைக் காத்த தமிழ் வேந்தன்.
இராவணனது கொடி வீணைக்கொடியாகும். அதனால்,இராவணன் 'வீணைக்கொடியோன்' எனப் போற்றபட்டான். அவனது ஆட்சிக்காலத்தில் இலங்கை கல்விகேள்விகளாலும், கலைகளாலும் ஓங்கி இருந்தது. நாட்டில் சிறந்திருந்த வளங்களால் செல்வம் நிறைந்திருந்தது.
மன்னனாய் இருந்தும் ஈசன் எனப் போற்றப்பட்டான் இராவணன்.
புவிநிலப்பரப்பில் பல கண்டங்கள் இருந்தன. அவற்றில் ஒரு கண்டமாக இப்போதைய இந்தியாவும் அதனை அண்டிய நிலப்பரப்புகளும் காணப்பட்டன. இக்கண்டங்களை ஆட்சி செய்தவர்களில் மனுச்சக்கரவர்த்தி என்பவனும் ஒருவன். இவனுக்கு சமன் என்று ஒரு மகனும், ஈழம் என்று ஒரு மகளும் இருந்தார்கள். மனுவின் பின்னர் இவ்விருவரும் இக்கண்டத்தை ஆண்டு வந்தனர். தென்பகுதியை சமனும், வடபகுதியை ஈழம் என்று அழைக்கப்பட்ட குமரியும் ஆண்டு வந்தனர். குமரி ஆட்சிசெய்த பகுதிகளை குமரிக்கண்டம் என்று அழைக்கப்பட்டு வந்தது. குமரிக் கண்டத்தில் உள்ள ஒரு நகரில் கன்னியாகிய குமரி (ஈழம்) ஆட்சி புரிந்தமையால் அந்நகரம் கன்னியாகுமரி என்று அழைக்கப்பட்டது. இக்கன்னியாகுமரி என்னும் பட்டினம் குமரி கண்டத்துக்குச் சிலகாலம் தலை நகராகி விளங்கியது.
இந்தக் குமரிக் கண்டத்திலேயே இலங்கை நாடு, பாண்டி நாடு, சேர நாடு, சோழ நாடு முதலிய நாடுகள் அடங்குகின்றன. ஈழம் என்னும் அரசி ஆட்சி புரிந்த பகுதியே அவளின் பெயரால் ஈழம்நாடு என்று அழைக்கப்பட்டுக் காலக்கிரமத்தில் ஈழநாடு ஆகியது. இடையில் ஏற்பட்ட கடல்கோள்களே ஈழநாடு என்று அழைக்கப்பட்ட தற்போதைய இலங்கையை ஏனைய நிலப்பரப்புகளில் இருந்து பிரித்துவிட்டன. இக்கடல் கோள்களினால் நிலப்பரப்பு மாத்திரமன்றிப் வரலாற்றுச் சான்றுகள் எல்லாம் சமுத்திரத்துள் ஆழ்ந்து விட்டது. சமன் ஆண்ட பிரதேசமும் கடலுள் அமிழ்ந்தி விட்டது. மிகுதியான நிலப்பரப்பு பாரத கண்டம் இலங்கை முதலிய பல தேசங்களாக பிரிந்தது.
- சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை ஆகிய காப்பியங்களில் குமரிக் கண்டம் பின்னர் அழிவுக்குட்பட்தாக கூறப்படுகின்றது.
- ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த ஏர்ண்ஸ்ட் ஹேக்கெல் (Ernst Haeckel) கூற்றுப்படி இலேமுரியாக் கண்டத்திலிருந்தே மனித இனம் தோன்றியிருக்கலாம் எனவும் மேலும் அவற்றின் தொல்லுயிர் எச்சங்கள்பல அக்கண்டம் கடற்கோளால் அழிக்கப்பட்டதனால் கிடைக்கப் பெற இயலவில்லை எனவும் கூறுவது குறிப்பிடத்தக்கது. மேலும் சில விஞ்ஞானிகள் இத்தகு கண்டம் பசிபிக் கடல்வரை இருக்கப் பெற்றிருக்கலாம் என்னும் கூற்றையும் தெரிவு படுத்துகின்றனர். இந்த இலேமூரியாக் கண்டமே குமரிக்கண்டமாக இருக்கலாம் என்று சிலர் கருதுகின்றார்கள்.
அழிவுற்றது எனக்கருதப்பவும் குமரிக்கண்டம்பின்னர் குமரியின் சந்ததிகளில் தோன்றிய அரசர்களில் பரதன் என்பவனும் ஒருவன். இவன் நாற்பது வருடங்களாக குமரிக்கண்டத்தை ஆண்டுவந்தான். இவனின் ஆட்சியில் இக்கண்டம் செழிப்பாக சிறப்புற்று விளங்கியமையால் பின்னாளில் இக்கண்டத்துக்கு பரதகண்டம் என்று வழங்கப்பட்டது.
அந்நாட்களில் இக்கண்டத்தில் வாழ்ந்தவர்களை பரதர், நாகர், இயக்கர், அரக்கர், இராட்சதர், பூதர், அசுரர், அவுணர், இடிமபர், கருடர், முனிவர், சித்தர், கந்தருவர், வானரர் என பல பெயர்களால் அழைக்கப்பட்டு வந்தனர். இராமாயணத்தில் வாலி, சுக்கிரீவன் எனும் வீரர்கள் மேற்கூறப்பட்ட வானர வகுப்பை சேர்ந்தவர்களெனக் கூறப்பட்டுள்ளது. இலங்கையின் வேந்தனாக கூறப்படும் இராவணனும் அவனை சேர்ந்தவர்களையும் இயக்கர், நாகர் அல்லது ராட்சதர்கள் எனக்கூறப்பட்டுள்ளது. இவர்கள் அந்நாட்களில் நாகரீகம் அடைந்தவர்களாகவே காணப்பட்டார்கள்.
சமயவழிபாடுகளில் சிறப்பாக இருந்தார்கள். எனினும் இராமயணமானது வட இந்தியர்களான ஆரியர்களால் இயற்றப்பட்டமையாலும், அவர்களின் கதைகளுக்கு முக்கியத்துவமாக கொண்டு காணப்படுவதால் தென்பகுதியை சேர்ந்த இராவணனை ஒரு அரக்கனாக, காமுகனாக சித்தரித்துள்ளார்கள் என்பது சிலருடைய கருத்து.
இராவணன் சிவபக்தன், சமயவழிபாடுகளில் அக்கறை உள்ளவன் என்பதை இராமாயணம் கூறியுள்ளபோதிலும், அக்காலத்தில் தென் இந்தியாவிலும் இலங்கையிலும் வாழ்ந்த இயக்கர் நாகர் போன்ற பூர்வீகக்குடிகளுடன் குடியேற்றவாசிகளான ஆரியர்களுக்கு பகை இருந்துள்ளது. இதன் காரணமாகவே இராவணனையும் அவனை சார்ந்தோரும் அவ்வாறு தீயவர்களாக சித்தரிக்கப்பட்டுள்ளது. உண்மையில் அவ்வாறில்லை என்று கூறுகிறார்கள்.
இலங்கையின் ஆதிக்குடிகளான, முக்கியமாக பேசப்படுகின்ற இயக்கர் நாகரின் ஆட்சிகள் பற்றிப் பார்ப்போமேயானால்... திரிகோணமலை, இலங்காபுரம், சிங்கன்நகர், பணிபுரம், திருகோயில், முருகன்துறை, கலியாணி ஆகிய இடங்களை தலைநகராக் கொண்டு பல மன்னர்கள் ஆட்சி செய்ததாக வரலாற்று நூல்களில் கூறப்படுகின்றது. இவற்றில் முக்கியமானவனான இராவணனின் ஆட்சிக்காலம் பற்றி பார்க்கலாம்.
இக்காலத்தில் ஆண்ட சில மன்னர்கள்
- சயம்பன்
- சயம்பனின் மருமகன் யாளிமுகன்
- ஏதி
- ஏதியின் மகன் வித்துகேசன்
- வித்துகேசனின் மகன் சுகேசன்
- சுகேசனின் மகன் மாலியவான்
- மாலியவான் தம்பி சுமாலி
- குபேரன்
இராவணன் ஆட்சி அக்காலத்து நாகர் பரம்பரையில் வந்த கைகேகி என்னும் தமிழ் அரச குமாரி (இவள் மேலே கூறப்பட்ட சுமாலியின் மகள்) வச்சிரவாகுவைக் கூடி இராவணன், கும்பகருணன் விபீசணன் புதல்வர்களையும் சூர்ப்பனகை என்ற புத்திரியையும் பெற்றாள். இப் பெயர்கள் இவர்களின் பகைவர்களால் அழைக்கப்பட்டு பிரபல்யம் அடைந்த பெயர்களாகும்.
ஆனால் இவர்களின் பிள்ளைப் பெயர்கள் முறையே சிவதாசன், பரமன், பசுபதி, உமையம்மை என்பனவாகும். சிவதாசனே இராவணன் என்றும், பரமனே கும்பகருணன் என்றும் பசுபதியே விபீசணன் என்றும் உமையம்மையே சூர்பனகை என்றும் அழைக்கப்பட்டனர்.
இலங்கையின் ஆட்சி உரிமையை பெறுவதற்கு இராவணன் தனது தமையானாகிய குபேரனுடன் யுத்தம் செய்தான். குபேரன் என்பவன் இராவணனின் தந்தையாகிய வச்சிரவாகுவின் இயக்கசாதியை சேர்ந்த இன்னொரு மனைவியின் மகன். தம்பியுடன் யுத்தம் செய்வது முறையன்று எனக் குபேரன் எண்ணியதால் ஆட்சிப் பொறுப்பை இராவணனிடமே ஒப்படைத்து விட்டுத்தான் அழகாபுரியை ஆட்சி செய்தான். அக்காலத்தில் குபேரனின் ஆட்சியில் இயக்கர்கள் அதிகமாக வாழ்ந்தார்கள்.
குபேரனுக்குப்பின் இராவணனன் இலங்கை முழுவதற்கும் அரசனாகி இலங்காபுரத்தை (தற்போதைய தமிழீழத்தின் தலைநகர் திருகோணமலை )தலைநகராக கொண்டு ஆண்டு வந்தான். இராவணன் மண்டோதரியை திருமணஞ் செய்தான். மண்டோதரியும் கற்பிற் சிறந்தவளாக விளங்கினாள். இவள் இந்திரசித்து, அதிசகாயன் ஆகிக திறமைமிக்க புத்திரர்களைப் பெற்றேடுத்தாள் .
சரி எப்படி இந்த கதையை நம்புவது ?
அதற்கான ஆதாரமாக நன் முன்வைக்கப்போகும் முதலாவது ஆதாரம் என்னவென்றால் இலங்கையைச் சுற்றி ஐந்து திசைகளிலும் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த சிவாலயங்கள் . இந்த சிவாலயங்கள் உருவாக்கப்பட்ட வரலாற்றை உற்றுநோக்கினால் , இவை அனைத்துமே சுமார் 3500-4500 ஆண்டுகாலப் பழமையானவை .
(இவற்றை நான் ஏற்றகனவே பதிவிட்டுள்ளேன்) இவை யாரால் உருவாக்கப்பட்டவை ?
தமிழ் மன்னர்களான மூதசிவன் பரம்பரையில் வந்த ஐந்து மன்னர்கள் மற்றும் எல்லாளன் போன்றோர் சுமார் 2600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சைவர்கள் எனினும் அவர்கள் அனுராதபுரம் இராட்சியத்தையே ஆட்சி செய்தவர்கள் .
இராஜராஜ சோழனும் , பாண்டியர்களும் சுமார் 1000 வருடங்களுக்கு முன்னர் ஆட்சி செய்தவர்கள் . இவர்களால் மேற்படி சிவாலயங்கள் புனர் நிர்மானம்தான் செய்யப்பட்டதாக வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன.
அப்படியாயின் முழு இலங்கையையும் ஆட்சிசெய்த யாரோ ஒரு சிவ பக்தனால்தான் இந்த ஐந்து சிவாலயங்களும் உருவாக்கப்பட்டிருக்க வேண்டுமல்லவா ? அப்படியாயின் முழு இலங்கைத் தீவையும் நல் ஆட்சிசெய்த , அங்கு வாழ்ந்த மக்களை நேசித்த , அவர்கள் வழிபடவும் , அவர்களைக் காக்கவும் , தானும் வழிபாடு செய்யவும் அந்த சிவாலயங்களை நிறுவிய தமிழன் , சிவ பக்தன்.இராவணன் மனைவி பெயர் மண்டோதரி என்றுள்ளது. கதைகளிலும் அப்படித்தான். அவர்களது இயற்பெயர் வண்டார்குழலி.
மகா சோழ சாம்ராஜ்யம் பர்மாவில் (மியன்மார் )
கிபி 1024 இல் இராஜராஜ சோழனின் மகனான இராஜேந்திர சோழனின் பேரன் சொக்கடே பெரும்படையுடன் (கப்பற்படை) தென் பர்மாவை (மியன்மாரை) வந்தடைந்தான் .
இன்றைய இரங்கூன் நகரை அழித்தொழித்து தென்பர்மாவைக் கைப்பற்றினான்.
அவனுக்குப்பின்னர் அவனது இளைய சகோதரன் அனுருத்த அல்லது அனவர்த்த எனப்படுபவனால் 1079 வரை பர்மா ஆளுகைக்கு உட்படதாகப் பதிவுகள் காணப்படுகின்றன .
ஆக அந்தக்கலப்பகுதிகளில் பர்மாவில் சைவ பௌத்த ஆலயங்கள் நிறுவப்பட்டன.
அதன்பின்னரும் தமிழர்கள் அல்லாத மன்னர்களாலும் பௌத்த ஆலயங்கள் நிறுவப்பட்டன.
1870 களில் ஆங்கிலேயர்களால் தமிழ்நாட்டிலிருந்து தமிழர்கள் புகையிரதப் பாதைகள் , சுரங்கங்கள் அமைத்தல் நடவடிக்கைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டனர் என்று சொல்லப்பட்டாலும் , உண்மையில் திட்டமிட்டு பஞ்சம் ஏற்படுத்தப்பட்டு , முகவர்குழுக்கள் உருவாக்கப்பட்டு அவர்களைப்பயன்படுத்தி ஏமாற்றி அழைத்துச் செல்லப்பட்டனர்.
அடிமைகள்போல் நடத்தப்பட்டு கடுமையான வேலை வாங்கப்பட்டு , ஒருவேளை மட்டுமே உணவு வழங்கப்பட்டு இலட்சக்கணக்கில் தமிழர்கள் மரணிக்க நேர்ந்தது.
எஞ்சியோர் பர்மாவில் குடியேறினார்கள்.
மேலும் சில தமிழர்கள் வியாபாரம் செய்யவெனவும் , வேலை செய்யவெனவும் பர்மாவில் வந்து குடியேறினார்கள்.
ஆங்கிலேயர்களின் ஆட்சியில் பர்மா இருந்தவரை தமிழர்களின் நிலை அபரீதமாக உயர்வடைந்து வந்தது. பர்மாவின் பொருளாதாரம் தமிழர்களின் கையில் வந்தது.
இந்த நிலை 1942 இல் ஜப்பான் உள்நுழையும் வரை நீடித்தது.
1942 இல் பிரித்தானியா பர்மாவை விட்டு பின்வாங்கியது.
ஜப்பான் படைகளின் பின்புலத்துடன் பர்மியர்களால் தமிழர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. ஒருநாளைக்கு 500-800 தமிழர்கள் கொல்லப்பட்டதாகப் பதிவுகள் காணப்படுகின்றன. தமிழர்கள் அகதிகள் ஆகினர் . இந்தியாவுக்கு சுமார் மூன்று இலட்சம் அகதிகள் தப்பி வந்தார்கள். சுமார் மூன்று நான்குமாத நடைப்பயணத்தில் காட்டு வழிகளில், மலைகளில் , ஆறுகளில் இறந்து போனவர்கள் இதைவிட அதிகம்.
மீண்டும் ஒருசில ஆண்டுகளில் பர்மிய இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. நாட்டு மக்களின் சொத்துக்கள் அனைத்தும் நாட்டுடமை ஆக்கியது. இதனால் உண்மையிலேயே இழந்தவர்கள் தமிழர்கள் . அவர்களின் சொத்துக்கள் அனைத்தும் ஒரே இரவில் நாட்டுடமை ஆனது.
இன்று தமிழர்கள் சாதாரண விவசாயிகள் அல்லது கூலித் தொழிளார்கள்.
சுமார் பத்து இலட்சம் ஏழைத் தமிழர்கள் பர்மாவில் வாழ்கிறார்கள். இவர்கள் கோயில்களில் தமிழ் வகுப்புக்களை நடத்தி தமிழ் வளர்க்க பாடுபடுகிறார்கள்.
1870 தொடக்கம் கட்டப்பட்ட கோயில்கள் நூற்றுக்கணக்கில் காணப்படுகின்றன.
வறுமை நிலையிலும் தமிழ் வளர்க்கப் படாதபாடு படுகிறார்கள் . அதுவே இவர்களின் சிறப்பு!
இராவணன் இறுதியாக ஆட்சி செய்த இடம் சிகிரியா என்று கூறப்படுகிறது.இராவணனின் மறைவுக்குப் பின்னர் விபிஷணன் ஆட்சிப்பொறுப்பை பெற்றுக்கொண்டதாகவும் , அவன் தனது ஆட்சிமையத்தை களனிக்கு மாற்றியதாகவும் , களனியில் அமைந்துள்ள ஒரு பௌத்த விகாரையில் விபிசனனுக்கு சிலையொன்று வைக்கப்பட்டுள்ளதாகவும் நண்பர் யாழறிவன் அவர்களின் கட்டுரையில் படித்தேன் .
இராவணன் கோட்டை , இராவணன் குன்று , சிகிரியா குன்று என்று பலபெயர்களில் அழைக்கப்படும் 660 அடிகள் உயரமான இந்தக்குன்று இராவணின் கோட்டையாக இருந்ததாகவும் , இந்தக்குன்றின் மேற் தளத்தில்தான் இராவணனின் புஸ்பகவிமானம் தரையிறக்கப்பட்டதாகவும் அறியமுடிகிறது.இப்பாறையின் மேற்பரப்பில் நீர்த் தடாகம் ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கிறது.
இந்தக் குகையின் அல்லது கோட்டையின் உட்புறத்தில் வரையப்பட்டிருக்கும் ஓவியங்கள் உலகப் புகழ் பெற்றவை. இந்த ஓவியங்களிலுள்ள பெண்கள் மேகத்தில் மிதப்பதுபோல வரையப்பட்டிருப்பதால், இவர்கள் தேவதைகளாகவோ ,அல்லது இறைவனின் பெண்களாகவோ இருக்கலாமென்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.
உலகின் ஈர்ப்பு மையம் முழுவதும் ஒன்று குவியும் ஒரு அற்புதமான மைய இடத்தில் இந்தக் கோட்டை அமைக்கப்பட்டிருப்பதாகவும் , இதன்மூலம் இங்கு வாழ்ந்தவர்கள் இறை சக்தியோடு தொடர்பு கொள்ளத்தக்க வகையில் இந்தக்கோட்டையை திட்டமிட்டு அமைத்திருக்க வேண்டுமென்றும் மேலை நாட்டு அறிஞர்கள் கூறுகிறார்கள். ஆக மொத்தத்தில் மனித சக்திக்கு அப்பாற்பட்ட அல்லது இறைவனின் உதவியோடுதான் இவ்வாறான கோட்டை அமைக்கப்பட்டிருக்க வேண்டுமென்று அறிஞர்கள் கருதுகிறார்கள் .
5 ஆம் நூறாண்டில் தமிழ் மன்னனாகிய காசியப்பனால் மேலும் மெருகூட்டப்பட்டு பாதுக்காகப்பட்டது சிகிரிய குகை குன்று . அந்த குகைகளினுள் வரையப்பட்ட ஓவியங்கள் அந்த பகுதிகளில் வாழ்ந்த ஆதி தமிழ் குடிகளின் கலாச்சாரத்தை, பண்பாட்டை பிரதி பலிக்கின்றது. அந்த பகுதிகளில் வாழ்ந்த பூர்வகுடி தமிழர்களால் வரையப்பட்டவை.
இந்த ஓவியங்களையும், அந்த பகுதியை ஆண்ட மன்னன் வரலாறுகளையும் அழித்து மறைத்தது சிங்களம். ஏன் எனில் இந்த பகுதிகள் தமிழருக்கு சொந்தமான பகுதிகள் என்னும் உண்மை தெரிந்து விடக் கூடாது என்பதற்காகவே.
தமிழ் மன்னன் காசியப்பன் என்னும் பெயரை, காசியப்ப என்று திரித்து , ஒரு புளுகு கதையையும் எழுதி வைத்தது சிங்களம்.
சிகிரிய ஓவியங்களில் இருத்த அனைத்து தமிழர் மரபுக்கு உரிய " நெற்றிப் பொட்டுகளை ", சுரண்டி அழித்தது.
இந்தக்கோட்டையை பிற்காலத்தில் கிபி 477-495 வரை காசியப்பன் என்ற அரசன் பாதுகாப்பாக ஒளிந்து கொள்வதற்க்காகப் பாவித்தான்.எனினும் எதிரிகள் கண்டுகொண்டதால் தனது தலையை தானே வெட்டிக்கொண்டு தற்க்கொலை செய்துகொண்டதாக வரலாற்றில் பதியப்பட்டுள்ளது.
அதனால் இக்கோட்டை அவனால் அமைக்கப்பட்டதாக சில இடங்களில் பதியப்பட்டிருக்கின்றது.இந்தக்கோட்டையைப் பற்றி நிறைய எழுதலாம். இலங்கேஸ்வரன் இராவணன் பற்றிய எனது பதிவுகளை விமர்சனம் செய்யும் அன்பர்களுக்கு நான்றி!
இங்கே நான் தெரிவித்துக்கொள்ள விரும்புவது என்னவென்றால் , யாரோ சொன்னார்கள் என்பதற்காகவோ , அல்லது இராமாயணம் தொடர் பார்த்துவிட்டோ நான் இராவணன் பற்றிப் பதிவிடவில்லை. அதற்க்காக நிறைய இணையத்திலும் வெளியிலும் தேடித் தேடி படிக்கவேண்டியிருந்தது.
பரராசசேகரன் உலா
வையாபாடல் - 15ஆம் நூற்றாண்டு - வையாபுரி
கைலாயமாலை - 16ஆம் நூற்றாண்டு - முத்துராசக்கவிராசர்
வைபவமாலை - 18ஆம் நூற்றாண்டு -
மாதகல் மயில்வாகனப்புலவர்
பிரித்தானியர் கால நூல்கள்
History of Jaffna - 1884 - S.Kasishetty
Jaffna Today and Yesterday - 1907 - Duraiyappa Pillai
History of Jaffna - 1912 - Muththuthampy Pillai
யாழ்ப்பாண வைபவ கௌமுதி - 1918 - வேலுப்பிள்ளை
Ancient Jaffna - 1926 - Rajanagam
Critiques of Jaffna - 1928 - Njanappiragasar
Tha Jaffna Kingdom
The Ancient People of Sri Lanka are Tamils
யாழ்ப்பாண பூர்வீக வைபவம்
யாழ்ப்பாண குடியேற்றம்
புதிய நூல்கள்
இலங்கைவாழ் தமிழரின் வரலாறு - கே.கணபதிப்பிள்ளை
Tamils and Ceylon - நவரட்ணம்
Kingdom of Jaffna - 1978 - Pathmanathan
Early Settlements in Jaffna - Ragupathy
யாழ்ப்பாண இராட்சியம் - சிற்றம்பலம்
பூனகரி தொல்பொருள் - புஸ்பரத்தினம்
இவ்வளவு நூல்களையும் ஆராய்ந்து யாழறிவன் அவர்கள் இராவணனின் பூர்வீகம் பற்றிய கட்டுரையை எழுதியிருந்தார் . நான் அதைப்படித்து அதற்கு மேலும் தேடிப்படித்து எழுதியுள்ளேன் . சும்மா யாரோ சொன்னார்கள் என்பதற்க்காக எழுதவில்லை. இராவணன் பற்றிய எனது பதிவுகளை ஆரம்பத்திலிருந்து இறுதிவரை படிப்பவர்களுக்கு இது நிச்சயம் புரியும். நடுவிலிருந்து தொடங்கியவர்களுக்கு புரியாமலிருக்கலாம் .
அவரவர் கருத்துக்களைத் தெரிவிக்க எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. ஒரு விசயத்தை நான் முன்வைக்கும்போது இயன்ற அளவுக்கு அதற்கான ஆதாரங்களை முன்வைக்க முயற்சி செய்கிறேன் . அதேபோல மறுப்பவர்கள் அததற்கான ஆதாரங்களை முன்வைத்தால் திருத்திக்கொள்ள இலகுவாக இருக்கும் . யாரோ சொன்னார்கள் என்பதுபோல சொல்லி ஒரு விஷயத்தை மறுத்து எழுதுவது ,கஷ்டப்பட்டு எழுதும் எங்கள் போன்றோரைக் காயப்படுத்துகிறது.மன்னன் இராவணனிடம் புட்பக விமானம் இருந்ததா ?
ஆம் என்றோ இல்லை என்றோ அவசரப்பட்டு முடிவெடுக்காமல் கொஞ்சம் ஆராய்ந்து பார்க்கலாமென்று நினைக்கின்றேன் .
இராவணனிடம் புட்பக விமானம் இருந்ததாகக் கூறுபவர்கள் யார் ?
அவனது ஆதரவாளர்களா ? என்று பார்த்தால் இல்லை அவனது எதிரிகளே
அப்படிக்கூறு கிரார்கள்.
உண்மையில் கதாநாயகனிடம்தானே விமானம் இருந்திருக்க வேண்டும் ? ஆனால் இங்கு வில்லனாக சித்தரிக்கப்படும் இராவணனிடம் விமானம் இருந்ததாக அவனது எதிரிகளே ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறார்களே ?
எங்கேயோ இடிக்கிறது அல்லவா ?
சரி பதிவுகளைத் தேடிப்பார்த்தால் கிடைத்தவை ....
"இராவணன் ஒரு மிகச்சிறந்த சிவபக்தன் என்பதோடு அவனது காலத்தில் "ஈழம்" மிகச்சிறந்த தொழினுட்ப வசதிகளுடன் இருந்திருக்கிறது.
சிங்களத்தில் பதிவு செய்யப்ட்டுள்ள கட்டுரைகள் மற்றும் ஆவணங்கள் குறித்து சில நண்பர்களுடன் உரையாடிய அடிப்படையில் நான் அறிந்த சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
இன்று இருக்கும் "சிகிரியா" இராவணனின் காலத்தில் ராவணனின் "புஷ்பக விமானம்" இறங்கும் தளமாக பாவிக்கப்ட்ட இடமாக இருக்கலாம் என்று சில சிங்கள ஆய்வாளர்கள் எழுதியிருக்கிறார்கள் என்று நண்பர்கள் மூலம் அறிந்திருக்கிறேன்.
இராவணன் பாவித்த புஷ்பக விமானத்தின் சில எச்சங்களும் இராவணன் காலத்து சில எச்சங்களும் சிகிரியா குன்றின் நடுவில் இருக்கிறது என்று நம்பப்படும் சுரங்கத்திற்குள் இருந்ததாகவும் மேற்கத்தேய ஆட்சியாளர்களின் காலத்தில்தான் அவை திருடப்பட்டிருக்கலாம் எனவும் அந்த சிங்கள ஆய்வாளர்கள் நம்புவதாக கேள்விப்பட்டிருக்கிறேன்.
சிகிரியா குன்றின் உச்சியில் இருந்து தரைக்கு குன்றின் நடுவில் சுரங்கம் இருக்கிறது என்று நம்புகிறார்கள். விமானம் வைத்திருந்த ராவணனால் சுரங்கம் அமைத்திருக்கமுடியும் என்ற நிலைப்பாடு ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்றுதான்.
தவிர எகிப்தில் இருக்க கூடிய பிரமிட்டுக்களின் கட்டுமானத்திற்கும் "பபிலோனா பூந்தோட்டம்" அமைப்பதற்கான கட்டுமானத்திற்கும் இராவணனின் காலத்தில் விமானம் மூலமாக ஆட்கள் அனுப்பபட்டிருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள்.
இது எகிப்து பிரமிட்டுகளில் காணப்படுவதாகவும் இதில் "லங்காபுர" என்று எழுதியிப்பதாகவும் சொல்கிறார்கள். ஆக எகிப்து பிரமிட்டு கட்டுமானங்களில் "ஈழத்தில்" இருந்து ஆட்கள் கொண்டு செல்லப்பட்டது அதுவும் விமானம் மூலம் கொண்டு செல்லபட்டார்கள் என்பது ஆய்வு.இதை ஒத்த விமானம் பிரித்தானியாவில் லண்டன் கொலண்டல் பகுதியில் உள்ள பழைய விமான காட்ச்சியகத்தில் காண முடியும்.Royal Air Force Museum London
முழு ஈழத்தையும் இராவணன் ஆண்டான் என்பதற்கு இன்றைய இலங்கையின் தெற்கில் இருந்து வடக்குவரை பாதிப்புகள் இருக்கின்றன. இராவணனை சார்ந்து நிற்கும் பெயர்கள் முக்கிய சின்னங்கள் என பல விடையங்கள் இன்னமும் கையாளப்பட்டுக் கொண்டிருக்கின்றன
இலக்கியங்களுடன் தொடர்புபடுத்தி இராவண் பற்றி சில தமிழ் ஆய்வுகள் இருப்பதனால் இன்று பல ஆதாரங்கள் தொலைக்கப்பட்டுள்ள நிலையில் நான் புதிதாக ஒன்றையும் எழுத முற்படவில்லை.
இருப்பதில் இருந்து ஆராய்வது அல்லது இருப்பதை வைத்துக் கொண்டு எமது அடுத்த தலைமுறைக்கு தகவல்களை கடத்துவது மிக முக்கியமானது என்று கருதுகிறேன்.
மேலும் தேடியபோது சில ஆச்ரயமான தகவல்கள் கிடைத்தன . அத்தகவல்களின்படி இராவணன் வாழ்ந்த அதே காலப்பகுதியில் தென் அமெரிக்காவில் வாழ்ந்த ஒரு மக்கள் கூட்டத்தினர் விமானங்களைப் பயன்படுத்தியதற்க்கான அல்லது கண்டு அறிந்து வைதிருந்தமைக்கான சான்றுகளாக அவர்கள் வரைந்து வைத்திருந்த ஓவியங்கள் , உருவாக்கியிருந்த சிலைகள் , கல்வெட்டுக்கள் , விமான மாதிரிகள் , விண்வெளி ஓடங்களின் ஓவியங்கள் , கல்வெட்டுக்கள் , விமான ஓடுபாதைகள் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அவர்களே விமானத்தைப் பாவித்திருந்தால் இராவணனும் விமானத்தைப் பாவித்திருக்க வாய்ப்பிருக்கிறதல்லவா ?
அடுத்தடுத்தப் பதிவுகளில் தென் அமெரிக்க மக்கள் கூட்டத்தினர் பயன்படுத்தியிருந்த விமானங்கள் பற்றிய தடயங்கள் குறித்து மேலும் விரிவாக ஆராய்வோம்."மாவீரன் இராவணனிடம் புட்பக விமானம் இருந்ததா ?"
என்று ஆராய்ந்துகொண்டு இருக்கின்றோம் .
கிட்டத் தட்ட இராவணன் வாழ்ந்த அதே காலப்பகுதிகளில் தென்னமெரிக்காவில் வாழ்ந்திருந்த ஒரு மக்கள் கூட்டத்தினர் (நாஸ்கா நாகரீகத்தினர் அல்லது நாஸ்கா மக்கள் ) விமானப் பாவனைகளோடு தொடர்பு பட்டிருந்தது அண்மையில் ஆராட்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் , அந்த தென் அமெரிக்க மக்கள் கூட்டத்தினர் விமானங்களைப் பாவித்திருந்தால் , நமது இராவணனும் விமானத்தைப் பாவித்திருக்க வாய்ப்பிருக்கிறது என்றும் எழுதியிருந்தேன் .
சரி தென் அமெரிக்க நாஸ்கா மக்கள் பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னர் விமானங்களைப் பாவித்தனரா என்றும் , அதற்கான ஆதரங்களையும் சற்று ஆராய்வோம் .
(ஆய்வாளர் நிராஜ் டேவிட் அவர்களின் ஆக்கத்தைத் தழுவி பயணிக்கின்றேன் )
தென்னமெரிக்க நாடான இன்றைய பெரு நாட்டில் நாஸ்கா பாலைவனம் என்றொரு பாலைவனம் அமைந்துள்ளது. இந்தப் பாலைவனத்தின் நடுப்பகுதியில் ,
சாதாரணத் தரைப்பகுதியில் இருந்து பலநூறு மயில்களுக்கு அப்பால் அதாவது இலகுவில் மனிதர்களால் சென்றடைய முடியாத பாலைவனத்தின் உள்ளே ஒரு பாறைகளால் ஆன மலைத்தொடர் காணப்படுகிறது .
இந்தப் பாறைகளால் ஆன நீண்ட மலையைச் சீர்செய்து அதாவது மட்டமாக வெட்டி 500 சதுர கி மீ பரப்பளவில் ஒரு இறங்குதளம் போன்ற சதுர வடிவிலான தளமொன்று அமைக்கப்பட்டுள்ளது . இத்தளத்தில் 23 கிமீ ஓடுதளம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
இது போன்ற ஒரு தளத்தை இன்றைய நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்திக்கூட அமைப்பது என்பது மிகவும் சவாலானது என்று கூறப்படுகிறது.
இந்த சதுர வடிவ 500 கிமீ பரப்பளவுள்ள தளத்தில் பல மையில்கள் நீளமான கோடுகள் வரையப்பட்டுள்ளது . இக்கோடுகள் பறையைத் துளையிட்டு சிலிக்கன் துகள்களால் நிரப்பி வரையப்பட்டுள்ளது . எனவே இக்கோடுகள் வானிலிருந்து பார்க்கும்போதும் தெளிவாகத் தெரியக்கூடியவாறு அமைக்கப்பட்டுள்ளது. தவிர இக்கோடுகள் இன்றுவரை அப்படியே இருக்கிறது .
இங்கு கோடுகள் தவிர்த்து பலவிதமான வடிவங்களும், சித்திரங்களும் வரையப்பட்டிருக்கின்றன. இவை அனைத்தும் தொடங்கிய புள்ளியிலேயே முடியும்.
இவை விமானிகளுக்கு வழிகாட்டும் குறியீடுகளாக (signals ) இருக்கின்றன

No comments:

Post a Comment